என் சவக் குழியைத் தேடாதே !

அந்த யுத்தக் களத்திலிருந்து
வாயில் நுரைத்தள்ள
மூச்சு இரைச்சலுடன்
தனியாக வரும் என் குதிரைக்கு
அம்மா !
தண்ணீர் கொடு !
அதன் முதுகைத் தடவிக் கொடு !

அது-
இன்னொரு வீரனுக்குப்
பயன்படட்டும்.

திரும்பி வந்த குதிரைமேல்
என்னைக் காணாமல்
கண்ணீர் சிந்தி
என் சவக் குழியைத் தேடாதே !


சுதந்தரம் அடைந்த இந்நாடு
உன் மைந்தனின்
இன்னொரு வடிவமன்றோ !

-ஜீர் கஸ்ட்டேலன்
க்ரோஷியன் கவிஞர்.

(சிந்தனையாளன் –பொங்கல் மலர் 2009 )

No Response to "என் சவக் குழியைத் தேடாதே !"

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger