இணையம் உலகத்தை சுருக்கிவிட்டது. இணைய வசதி கொண்ட ஒரு கணினி மூலம் உலகத்தினூடே பேசிடாலாம். இது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை . இந்திய மக்கள் தொகையில் 5 விழுக்காடுக்குக் குறைவாகவே இணைய பயன்பாட்டை உபயோகப்படுத்துகின்றனர். கொஞ்சம் வசதியானவர்கள் முதல் கணினி இணைய நுட்பக்கல்வி பயின்றோர் வரை இதை பெருமளவில் பயன்படுத்துவோராக உள்ளனர்.
மின் அஞ்சல், இணைய அரட்டை, பதிவுலகம் என்று விரிந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் மின் அஞ்சலை திறந்து பார்ப்பது, கடிதம் கண்டவுடனேயே இணைய வேகத்திற்கு அவரின் மனதும் மறு முனைக்கு செல்கிறது. படபடப்பு, இனம் புரியாத உணர்வு இதை படிப்பதவர்கள் உணர்ந்துஇருப்பார்கள்.