பொங்கு..தமிழே பொங்கு...



தமிழினத்தை பேரம் பேசும்

கயவர்களைக் கண்டு..

பொங்கு... தமிழே பொங்கு...

அண்டை மொழி ஆக்கிரமிப்பாளர்களைக்

கண்டு பொங்கு... தமிழே பொங்கு...

போலி புரட்சிகளையும் புயல்களையும்

கண்டு பொங்கு... தமிழே பொங்கு...

திரைப்படமே ஊடக இலக்கியமாக காணும்

போக்கை கண்டு பொங்கு... தமிழே பொங்கு...

ஏகாதிபத்தியம் செய்யும் காலிகள்

இனத்தை அழிதொழித்த போக்கிலிகளைக்

கண்டு பொங்கு... தமிழே பொங்கு...

ஆன்மீகப் போர்வையில்

கயவாளித்தனம் செய்யும் பார்ப்பனிய குருக்களை

கண்டு பொங்கு... தமிழே பொங்கு...

தாய்மண்ணை விலைப் பேசும்

அரசியல் பேடிகளைக்

கண்டு பொங்கு... தமிழே பொங்கு...

போலி பொதுவுடைமைவாதிகள்...

மார்க்சியத்தை

சட்டமன்ற நாடாளுமன்ற கழிவில் புதைத்த

போலிகளைக் கண்டு பொங்கு... தமிழே பொங்கு...

பொது உரிமையற்ற சமுகத்தில்

புதுமைசெய்ய வரும் பெரியாரின் படையே..

சாதியத்தின் கூறுகளை உடைக்கும்

அம்பேத்கரின் படைப்பே...

வர்க்கமூலத்தை கண்டு சாதியத்தை உடைக்க

என் தமிழ்ச் சமூகமே

அடிமைதனத்தை உடைக்க வாராய். வாராய்..

No Response to "பொங்கு..தமிழே பொங்கு..."

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger